உங்களை அன்புடன் வரவேற்கிறேன் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்

Wednesday, August 5, 2009

ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !

நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். ஒரு கடையில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்த போதிலும் மனதில் ஒரு நிறைவு இருந்தது. குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது.
இதே சூழ்நிலையில் ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கைச் சக்கரம் துபாய் மோகம் என்ற பேராசையில் சிக்கி தடம் புரண்டு விட்டது. ஆம் இந்த மோகம் எனக்குள் வந்ததல்ல, எனது தாய் வீட்டாரிடமிருந்து நற்போதனை என்ற மயக்க ஊசி மூலம் எனக்குள் ஏற்றப் பட்டது. ஊரிலிருந்து எவ்வளவு தான் உழைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் காணமுடியாது ! ஒரு இரண்டு வருடம் துபாய்க்கு போய் வந்தாலே போதும் வீடு, வாசல், நகை, பணம் என ஓரளவுக்கு சொத்து சேர்த்து விடலாம். பிறகு வேண்டுமானால் ஊரிலேயே ஏதாவதொரு கடைவைத்து பிழைத்துக் கொள்ளலாம். என்ற வசீகர திட்டத்தை கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது குடும்பத்தார் கூறிய திட்டமெல்லாம் உண்மையிலேயே நடந்து விட்டதை போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டது.
அப்போதே துபாய் மோகம் என்னும் நெருப்பு எனக்குள் கொழுந்து விட்டு எரிந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாதம் தானே ஆகிறது புது மனைவியை விட்டு பிரிவது நியாயமா? என்ற கேள்விக்கெல்லாம் கூட விடை கொடுக்க என் மனம் இசையவில்லை. காலம் தாமதிக்காது எனது ஊரின் முக்கியஸ்தர் ஒருவரை பார்த்து என்னை எப்படி யாவது துபாய்க்கு அனுப்பிவிடுங்கள். என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கெஞ்சிக் கூத்தாடினேன். நான் ஒன்றும் படித்த பட்டதாரியல்லவே, படிப்புக்கேற்ற வேலை தேட! அதனால் தான் என்ன வேலையாக இருந்தாலும் என சொல்லி இருந்தேன்.
எனது ஆர்வத்தைப் பார்த்து அந்த நல்ல மனிதர் சம்பளம் குறைவாக கிடைக்கும் விசா,டிக்கெட்க்கு 50 ஆயிரம் செலவாகும் பரவாயில்லையா எனக் கேட்டது தான் தாமதம் துபாய்க்கே போனது போல் ஒரு நம்பிக்கை எனக்குள் பிறந்தது. எவ்வளவு சம்பளமானாலும் பரவாயில்லை என்னை எப்படியும் துபாய்க்கு அனுப்பி விடுங்கள் என்ற கோரிக்கை வைப்பதில் மட்டும் கொஞ்சமும் சுரத்துக் குறையாமல் பார்த்துக் கொண்டேன். சரி பார்க்கலாம் என்ற அந்த பெரிய மனிதர் ஒரு வழியா என்னை துபாய்க்கு அனுப்பி விட்டார். நானும் பல கனவுகளுடன் துபாய் வந்து 15 ஆண்டுகள் ஓடி விட்டன.
என்னுடன் துபாய் வந்த எனது நண்பன் சுஹைல் மட்டும் சொல்லி வைத்தாற் போல இரண்டு வருடம் முடிந்ததுமே விசாவை கேன்சல் செய்து விட்டு தாயகம் போய் விட்டான். ஊரில் ஏதோ ஒரு பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக பிற நண்பர்களின் மூலம் கேள்விப்பட்ட ஞாபகமுண்டு. நான் துபாய் வந்து இரண்டு வருடம் முடியும் தருவாயில் விடு முறையில் ஊருக்கு போகலாம் என நினைத்து என் வீட்டாரிடம் அதாவது சகோதர, சகோதரிகளிடம் நான் ஊருக்கு வரப்போகிறேன் உங்களுக்கெல்லாம் என்ன வேண்டுமென கேட்டது தான் தாமதம் மிகப்பெரிய பட்டியலே வந்து சேர்ந்து விட்டது கடிதத்தின் வாயிலாக, அந்தப் பட்டியலுடன் ஒரு வேண்டுகோளும் இருந்தது தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
அதாவது உடனே வர வேண்டாம் துபாய் போய் இரண்டு வருஷம் தானே ஆகுது இன்னும் இரண்டு வருஷம் இருந்து உழைத்துவிட்டு கை நிறைய பணத்துடன் வந்தால் நல்லாயிருக்கும் என்ற வேண்டுகோள் தான் அது ! அந்தக் கடிதம் பார்த்ததுமே ஊருக்குப் போகும் எனது ஆசை யெல்லாம் கானல் நீராய் மாறிவிட்டது. எனது தாய், உடன் பிறந்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்த நான் என் மனைவியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்காத குற்றவாளி யாகி விட்டேன்.
பிறகு ஒரு வழியா 4 வருஷம் முடிந்து ஊருக்கு பயணம் மேற்கொண்டேன் விடுமுறையில் தான் ! அதற்கு முன்பே கடைசி இரண்டு வாரங்களும் யார் யாருக்கு என்னென்ன வாங்க வேண்டுமோ? அதையெல்லாம் கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ஆசை ஆசையாய் வாங்கினேன். தாய், சகோதரிகள், மனைவிக்கு சேலைகள் எடுத்துக் கொண்டேன், மற்றபடி வாசனை திரவியங்கள், தைலங்கள், சோப்புகள் என வகை வகையாக வாங்கிக் கொண்டேன். நான் எடுத்த சேலைகளில் என் மனைவிக்கு கத்திரிப் பூ கலரில் ஒரு சேலையும் என் சகோதரிக்கு ஆரஞ்சுக் கலரில் ஒரு சேலையும் ரொம்ப ஆசைப்பட்டு எடுத்தேன்.

தொடரும்.........

Sunday, March 22, 2009

உஷார்!! மக்களே உஷார்!!! பம்பர் பரிசு

இறைவன் திருப்பெயரால்.

இரவு பணியின் அசதி நல்ல அசந்து தூங்கிக்கொண்டு இருந்தேன் மலை நேரம் அஸர் தொழுகைக்கு நேரம் பாதி கடந்து இருந்தது திடீர் என்று எனது mobile கைப்பேசியில் ஒரு SMS என்னவென்று பார்க்க உடனே ஒரு missed call
சற்று தலை தூக்கி என்ன வென்று பார்த்தேன் பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி 50.000 திர்ஹம் பரிசு Congratulation dear Costumer you Have won The Lottery Dh 50,000 Please back call என்று எழுதி இருந்தது திடீரென்று ஒன்னும் புரியல உடனே சம்பந்த பட்ட நபரின் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் அவர் உடனே அரபி இங்கிலிஷ் ஹிந்தி என்று கேட்க நான் ஹிந்தியில் அவரிடம் பேசினேன் உடனே அவர் உங்களுக்கு 50,000 Dh பரிசு விழுந்து இருக்கிறது l அதை உங்கள் கணக்கில் வரவு வைக்க உஙகள் வ்ங்கியிம் கணக்கு எண் சொல்லுங்கள் என்ற உடனே எனக்கு புரிந்து விட்டது நீங்கள் யார் எங்கே இருந்து பேசுகிறீர்கள் என்ற கேள்வி மேல் கேள்வி கேட்டேன் இணப்பு உடன் துண்டிக்கபட்ட்து பிறகு நான் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது இணைப்பு துண்டிக்கபட்டுவிட்டது இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் ஒரு மெகா மோசடி இப்படி நடக்கிறது இங்கு விபரம் புரியாதா அப்பாவிகள் இதில் சிக்கி பணத்தையும் நிம்மதியையும் நிறைய இழந்து இருப்பார்கள்,சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் இப்படி சில மோசடி நடந்ததை பத்திரிகை மூலமாக தெரிந்துகொண்டேன்.நாம் எப்பொதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் நாம் வெளியில் முக்கிய மான மக்கள் மிகந்த இடத்தில் இருக்கும் போது கைப்பேசியில் தேவை இல்லாதவை நமது குடும்பம் சார்ந்த ரகசியங்களை பேசக்கூடாது சமூக விரோதிகள் உங்களை கண்கானிக்க கூடும்
எனக்கு தெரிந்ததை எழுதி விட்டேன் இனிமேல் உங்கள் கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கவும்,
நன்றி

Thursday, March 19, 2009

அமீர வாழ் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

இறைவன் திருப்பெயரால்.

அன்பார்ந்த சகோதரர்களே நாம் அனைவரும் தாய் தந்தை மனைவி மக்கள் என அனைத்து உறவுகளையும் பிரிந்து பொருளாதாரம் ஈட்டுவதற்கு தான் இங்கு (GULF)வ்ந்து இருக்கிறோம்.நமது லட்சிய கனவுகள் நிறைவு அடையும் வரை நேர்மையான வழியில் நமது உழைப்பு இருக்க வேண்டும்.பணத்தை விண் விரயம் செய்யாமல் சேமித்து வைக்கவும்.இளமைக்கு பிறகு முதுமை வரும் போது நாம் யாரிடமும் யாசகம் கேட்காமல் வாழவேண்டும்.அதற்க்கான வழிமுறையில் நாம் தெளிவான திட்டம் இருக்கவேண்டும். குறிப்பாக U.A.E. வாழ் சகோதரர்கள் இந்த நாட்டு சட்டதின் படி வாழவேண்டும்.வெளியே நாம் செல்லும் போது Meter taxi அல்லாது வேறு காரில் ஏறக்கூடாது வ்ழி பறி கொள்ளையர்கள் தங்களுடைய (உயிர்) பணம் பறிபோகும் அவலம் இங்கு நடக்கிறது.அறிமுகம் இல்லாத ஆட்களை தங்களுடைய காரில் ஏற்றவேண்டாம் போலிஸ் உங்களை கள்ள Taxi Service செய்கிறீகள் என்று சந்தேகப்பட்டு அபராதமும்.சிறை தண்டணை லைசென்ஸ் பறிபோகும்.
சாலைவிதிகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்.Red Signal விழும் போது த்டையை மீறி நடந்து சென்றால் Dh200(AJMAN) அபராதம் செலுத்த வேண்டும் வாகனம் ஓட்டும் போது கைப்பேசிகளை Cell Phone பேசுவதை தவிர்க்கவும் பெரும் விபத்துக்களை தவிர்க்கலாம். போக்குவரத்து விதிகளை சரியான முறையில் கடைபிடிக்கவும். பொது இடங்களில் குப்பை போடுவதை தவிர்க்கவும் மீறினால் அபராதம் கட்ட நேரிடும். எந்த லட்சிய கனவோடு நாம் இங்கு வந்து இருக்கின்றோம் அதை எல்லாம் வல்ல இறைவன் நிறைவேற்றி தருவான் என வேண்டியவனாக.
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன்2:168)